39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள்

Wednesday, February 23, 2011 ·

குடும்பத்துடன்....
இந்தியாவின் வடபிரதேசத்தில் உள்ள ஓர் ஊரில் 39 துணைவிமார், 94 பிள்ளைகள் மற்றும் 39 பேரப்பிள்ளைகளுடன் 66 வயது மனிதர் வாழ்ந்து வருகின்றார்.

பர்மா மற்றும் பங்களாதேஸ் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மிசோரம் எனனும் மலைப்பகுதிக் கிராமத்திலேயே இவர் வாழ்ந்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நூறு அறைகளைக் கொண்ட நான்குமாடிக் கட்டடம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமையறையை மாத்திரம் கொண்டிருக்கும் இக் கட்டடத்தில் இவரது துணைவிகள் முறையெடுத்து சமைத்து வருகின்றனர். திருமணம் முடித்த இவரது மகன்களும் இக் கட்டடத்திலேயே வேறு வேறு அறைகளில் வாழ்கின்றார்கள்.

"நான் ஒரு தடவை ஒரு வருடத்தில் பத்து திருமணங்கள் செய்திருக்கின்றேன்" என்கிறார் இச்சாதனைக்குச் சொந்தக்காரரான சியோனா சானா. அதனுடன் "இப்பொழுது கூட எனது குடும்பத்தினை விரிவுபடுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன், திருமணம் செய்வதற்கு எத்தகைய செயலையும் செய்யத்தயாராக இருக்கின்றேன்" என்றார்.

அனைவரும் தங்கும் வீடு...
துணைவியருடன்..

தகவல்: TeleGraph

0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator