கற்க கசடற - An Education Expo, பதிவுகள் ஆரம்பம்!

Sunday, October 04, 2009 · 0 comments

ஏற்கனவே எனது பதில் கூறியிருந்ததைப் போன்று கனடியத் தமிழ் சமூகத்தின் தேவைகளை முன்வைத்து முதன்முறையாக நடைபெறும் Education Expo பற்றிய மேலதிக விபரங்களுடன் இப்பதிவு:

ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் அறிவூட்டும் நிகழ்வு பற்றி உங்களிற்கு ஏற்கனவே அறியத்தந்திருந்தேன்.

ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வு நடைபெறுகின்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்விலே பல பயன்தரும் கல்விசார் விடயங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் பாலர் பாடசாலையில் இருந்து தரம் 12 வரையுள்ள பாடத்திட்ட விபரங்கள், இவ் வகுப்புகளில் கல்விபயிலும் மாணவர்கள் தொடர்பாகவும் அவர்கள் கல்வித்திட்டம் தொடர்பாகவும் பெற்றோர்கள் அறியவேண்டிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

அதுமாத்திரமல்லாது, high school என அழைக்கப்படும் இரண்டாம் நிலைப் பாடசாலையில் எவ்வாறு நேரங்களை ஒழுங்குசெய்வது, எவ்வாறு சோதனைக்கு தயாராவது எப்படிப் பல்கலைக்கழகத்திற்கான பொருளாதார நிலையைக் கவனிப்பது, எவ்வாறான பாடங்களை எப்படித் தெரிவுசெய்வது போன்ற பயனுள்ள தகவல்கள் மாணவர்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

அதேபோல் கனடாவிற்குப் புதிதாகக் குடியேறியோர் எவ்வாறு இக் கல்வித் திட்டத்தினுள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது தொடர்பான தகவல்களும் இங்கே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அவ்வாறே வேலைதேடுவது தொடர்பான பயிற்சிகள், தகவல்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு நடாத்தப்படுகின்ற பயிற்சிப் பட்டறைகள் (workshops) இனில் பங்கு பற்றுவதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளவேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இப் பதிவுகள் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி, வெள்ளிக்கிழமை, வரை இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை இணையத்தளமூடாகவும் (http://www.kalvicanada.org/) , நேரடியாக கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் வாரநாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மேற்கொள்ளமுடியும். கனடியத் தமிழர் பேரவையானது 31 Progress Avenue (Kennedy/Progress), Suite 216 இனில் அமைந்துள்ளது.

பயிற்சிப்பட்டறைத் (workshops) தலைப்புக்கள் - http://kalvicanada.org/program.html

பதிவுகளிற்கு - http://kalvicanada.org/registration.html

இதுபற்றிய மேலதிக விபரங்களை 905-471-8070 என்ற தொலைபேசியில் அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி info@kalvicanada.com






'கற்க கசடற' - Education Expo

Saturday, September 19, 2009 · 0 comments

கற்க கசடற என்னும் ஓர் கல்விக் கண்காட்சி ஒன்று கனடித் தமிழர்களால் கனடியத் தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி நாள்களில் இது நடைபெறும் எனத் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.


இதுபற்றி மேலதிக விபரம் கிடைத்தவுடன் விபரமாகப் பதிவிடப்படும்.

http://www.kalvicanada.com/

The reason men are silent (Funny)

Friday, September 18, 2009 · 0 comments

WIFE: "What would you do if I died? Would you get married again?"

HUSBAND: "Definitely not!

WIFE: "Why not? Don't you like being married?"

HUSBAND: "Of course I do."

WIFE: "Then why wouldn't you remarry?"

HUSBAND: "Okay, okay, I'd get married again."

WIFE: "You would?" (with a hurt look)

HUSBAND: (makes audible groan)

WIFE: "Would you live in our house?"

HUSBAND: "Sure, it's a great house."

WIFE: "Would you sleep with her in our bed?"

HUSBAND: "Where else would we sleep?"

WIFE: "Would you let her drive my car?"

HUSBAND: "Probably, it is almost new."

WIFE: "Would you replace my pictures with hers?"

HUSBAND: "That would seem like the proper thing to do."

WIFE: "Would you give her my jewellery?"

HUSBAND: "No, I'm sure she'd want her own."

WIFE: "Would she wear my shoes"

HUSBAND: "No, she's size 6."

WIFE: ........ silence

HUSBAND: "sh#t."

Office Conflict Resolution: 11 Communication Tips for a Healthy Workplace

· 0 comments





Misunderstandings and communication problems remain one of the most common sources of workplace strife, and interpersonal difficulties are magnified when conflicting work styles coexist in one setting. Generational differences (baby boomers vs. GenX-ers), personal management styles, educational background, and cultural diversity are all potential sources of office misunderstandings.
While conflict is inevitable, it need not ruin your workday or cause unbearable stress. Try these conflict resolution tips to make your work environment a less stressful, more productive place:
  1. Be specific in formulating your complaints. "I'm never invited to meetings" is not as effective as "I believe I would have been able to contribute some ideas at last Thursday's marketing meeting."
  1. Resist the temptation to involve yourself in conflicts that do not directly involve you or your responsibilities. Even if someone has clearly been wronged, allow him or her to resolve the situation as he/she chooses.
  1. Try to depersonalize conflicts. Instead of a "me versus you" mentality, visualize an "us versus the problem" scenario. This is not only a more professional attitude, but it will also improve productivity and is in the best interests of the company.
  1. Be open and listen to another's point of view and reflect back to the person as to what you think you heard. This important clarification skill leads to less misunderstanding, with the other person feeling heard and understood. Before explaining your own position, try to paraphrase and condense what the other is saying into one or two sentences. Start with, "So you're saying that..." and see how much you really understand about your rival's position. You may find that you're on the same wavelength but having problems communicating your ideas.
  1. Don't always involve your superiors in conflict resolution. You'll quickly make the impression that you are unable to resolve the smallest difficulties.
  1. If an extended discussion is necessary, agree first on a time and place to talk. Confronting a coworker who's with a client or working on a deadline is unfair and unprofessional. Pick a time when you're both free to concentrate on the problem and its resolution. Take it outside and away from the group of inquisitive coworkers if they're not involved in the problem. Don't try to hold negotiations when the office gossip can hear every word.
  1. Limit your complaints to those directly involved in the workplace conflict. Character assassination is unwarranted. Remember, you need to preserve a working relationship rather than a personal one, and your opinion of a coworker's character is generally irrelevant. "He missed last week's deadline" is OK; "he's a total idiot" is not.
  1. Know when conflict isn't just conflict. If conflict arises due to sexual, racial, or ethnic issues, or if someone behaves inappropriately, that's not conflict, it's harassment. Take action and discuss the problem with your supervisor or human resources department.
  1. Consider a mediator if the problem gets out of control, or if the issue is too emotional to resolve in a mutual discussion. At this step, your supervisor should be involved. You can consider using a neutral third party mediator within your own company (human resources if available) or hiring a professional counselor.


Applying the Wellness Wheel to Life

The Wellness Wheel is primarily used as a tool to evaluate and improve health.  It reminds us that wellness is an overall balance between many different aspects.   Wellness Wheel
 HAS THE WHEEL FALLEN OFF?

Creative Thinking

· 0 comments

An old man lived alone in a village.
He wanted to spade his potato garden, but it was very hard work.
His only son, who would have helped him, was in prison.
 
The old man wrote a letter to his son and mentioned his situation:


Dear Son,


I am feeling pretty bad because it looks like I won't be able to plant my potato garden this year.
I hate to miss doing the garden, because your mother always loved planting time.
I'm just getting too old to be digging up a garden plot.
If you were here, all my troubles would be over.
I know you would dig the plot for me, if you weren't in prison.


Love,
Dad

Shortly the old man received this telegram:



"For Heaven's sake, Dad, don't dig up the garden!! That's where I buried the GUNS!!"

At 4 a.m the next morning, a dozen FBI agents and local police officers showed up and dug up the entire garden without finding any guns.



Confused, the old man wrote another note to his son telling him what happened, and asked him what to do next.

His son's reply was:



"Go ahead and plant your potatoes, Dad.. It's the best I could do for you from here."


Moral:


"NO MATTER WHERE YOU ARE IN THE WORLD, IF YOU HAVE DECIDED TO DO SOMETHING DEEP FROM YOUR HEART YOU CAN DO IT. IT IS THE THOUGHT THAT MATTERS.. NOT WHERE YOU ARE OR WHERE THE PERSON IS"

புலம்பெயர் நாடுகளும் தமிழர் ஊடகங்களும்.

Tuesday, September 15, 2009 · 0 comments

பிரித்தானிய ஆதிக்கம் நிலவிய காலணித்துவ காலத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தீவுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களிற்காக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறிது காலம் வேலைசெய்த பின்னர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தனர். அவ்வாறு திரும்பி வராதவர்கள் தாங்கள் சென்ற நாட்டின் வாழ்வுமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். இவ்வாறு தங்களை அந்தந்த நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் இணைத்துக்கொண்டவர்கள் மொரிசிஸ், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இலங்கைத் தீவில் வீச்சுக் கொண்ட இனப்பிரச்சினையின் பின்னர் உலக நாடுகளில் தமிழர்களின் பரம்பலானது ஓர் பெரும் வீச்சினை அடைந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் மிகப் பெரும்பகுதியினர் தாங்கள் சென்ற நாடுகளிலே தங்கள் வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் தாங்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையுடன் வாழ்ந்து வருவதுடன் தங்கள் சமுக கட்டமைப்பையும் பேணக்கூடியவர்களாகவும் தங்கள் தமிழ் மொழி அறிவினைத் தொடர்ந்து பேணி தங்கள் குழந்தைகளிற்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே பல்வேறு ஊடக முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக வேற்றுமொழியில் சரளமாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதவர்களிற்கு இம் முயற்சி மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும். ஆயினும் இவ்வூடகங்களோ இவ்வாறான மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. பணத்தைப் பெறும் ஒரு வழியாகவே இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் ஊடகங்களை நடாத்துகின்றனர். குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் தங்கள் தாய்நாட்டுத் தகவல்களையே தொடர்ச்சியாக கூறுகின்றார்கள். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிற்காக அந்தந்த நாடுகளில் நடாத்தப்படும் இவ்வூடகங்கள் அந் நாடுகளில் நடைபெறும் சமுதாய மாற்றங்களை அல்லது அங்கு வாழும் தமிழர்களில் செல்வாக்குச் செலுத்தும் அல்லது பாதிக்கும் விடயங்களில் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தாய்நாட்டுத் தகவல்கள் முக்கியமல்ல என்று இங்கு கூறவில்லை, தாய்நாட்டுடன் தாங்கள் வாழும் நாடு பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகின்றது என்பதனை இவ்வூடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தென்னிந்தியச் சினிமாப்பாடல்களும், இலங்கை இந்தியச் செய்திகளும், தென்னிந்தியச் சின்னத்திரைத் தொடர்களுமே இவ்வூடகங்களில் வெளிவருகின்றது. அந்தந்த நாட்டு நிலவரங்களை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமை என்பதை அவ்வூடகங்கள் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்யாது விடின் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இரண்டு தமிழர் குழுக்கள் உருவாகவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு அற்ற ஓர் தமிழ்ச் சமூகமாகவும் நாம் உருமாறும் நிலை ஏற்படும்

தமிழரும் அரசியற் தலைமையும்

Friday, August 28, 2009 · 1 comments

கடந்த மே மாதம் முதல் இடியப்பச் சிக்கலாக உருமாறிய தமிழீழப் பிரச்சினை ஓர் முடிவிற்கு வருவது போன்ற நிலை இதுவரை என் கண்களில் எட்டவில்லை. மாறாக மென்மேலும் இது சிக்கிலான வடிவம் எடுப்பது போன்ற தோற்றப்பாடே என்முன் தோன்றி நிற்கின்றது. பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து 1948ஆம் ஆண்டில் சிங்கள அசாங்களின் கைகளிற்கு இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் கைமாறி, தமிழர்களின் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இவ்வருட ஆரம்பம் வரை தமிழர்கள் தங்கள் உரிமை மீண்டும் பெறப்படப் போகின்றது என்ற நிலை இருந்தது. ஆயினும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போன்று தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலு உலக நாடுகளால் நசுக்கப்பட்ட வேளையில் மீண்டும் ஆரம்பித்த இடத்தை விட்டு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பின்தங்கியுள்ளதாகவே நான் உணருகின்றேன். ஆயுதப் போராட்டக் கருத்து வலுப்பெற்று இளையவர்கள் ஆயுதம் ஏந்திய 70இற்கு முற்பட்ட காலப்பகுதியை நான் ஊடகங்கள் மூலமும் பொத்தகங்கள் மூலமாகவும் பெற்றுக்கொண்ட அறிவினூடா திரும்பிப் பார்க்கின்றேன். பல்வேறு அரசியற் தலைவர்கள்@ தங்களிடம் தங்கள் இனத்தின் தேவைகள் தொடர்பாக ஓர் ஒத்த கருத்தினைக் கொள்ளமுடியாதவர்கள். சிங்கள அரசுகளுடன் தங்களை சமரசம் செய்துகொண்டு தமிழர் உரிமைகளை அடகுவைத்தவர்கள் எனப் பலர். இவர்களின் தமக்குள்ளான சண்டைகளைப் பொறுக்கமுடியாத இளையோர்கள் தாங்கள் அணி திரண்டனர். அவ் இளையோரிற்கும் இம் மூத்த தலைவர்களால் இடையூறுகள். இவற்றிற்கிடையே ஆயுதம் மீது இவ்விளையோர் நம்பிக்கை வைக்கின்றார்கள். பொன். சிவகுமாரன், சிங்களப் படைகளை தன்னந் தனியனான களைப்படையச் செய்கின்றான். தன்கூட தனக்கு கைகுடுக்கும் சிலவேளைகளில் நடுவழியில் விட்டுவிடும் நண்பர்கள் துணையுடன் ஆயுதம் மீது நம்பிக்கை வைக்கின்றான். அவன் வழியில் பிடிப்புக் கொண்டு பின்னாட்களில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. தன் கொள்கையில் உறுதி கொண்ட பொன். சிவகுமாரன் சிங்கள அரசபடைகளின் சுற்றிவளைப்பில் அகப்படும் போது நஞ்சுண்டு தற்கொலை செய்து தன் உறுதியை வெளிப்படுத்தினான். உருப்பெற்ற ஆயுதக் குழுக்கள் தமிழீழ விடுதலையைத் தங்கள் கொள்கையாக வரித்துக் கொண்டு ஆயுத இயக்கங்களாக உருமாற்றம் அடைகின்றன. பின்னர் தலைவர்கள் வழி தவறிய போக்கினைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்கள் வலுவிழக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் விடுதலை இயக்கமாக கொள்கைப் பிடிப்புள்ள போராளிகள், தளபதிகள் மற்றும் தலைவர்களுடன் உருமாறியது வரலாறு. இப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை எம் கண்முன்னே கண்டுவந்த தமிழர் மீண்டும் 70களின் ஆரம்பத்தில் எவ்வாறு மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட எம் தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் சொகுசுக்காகவும் அடிபட்டுக்கொண்டார்களோ அவ்வாறே அடிபட்டுக்கொண்டுள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரதேசத்தில் நிலங்களைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களே தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியும் தலைமையேற்றும் முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று அவர்களது இராணுவபலம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் இருந்து கொண்டு சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளிற்கு எதிராக எதும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கும் வேளையில் அவ்வாறான அரசியற் செயற்பாட்டை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக முன்னெடுத்து தமிழர்களின் பிரச்சினை தீர வழியேற்படுத்த வேண்டிய புலம்பெயர் சமூகமானது தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கல்படுத்தி மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு நகர்த்திச் சென்றுகொண்டுள்ளது. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் இருக்கும் தமிழர் அரசியலில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் நலன்களை முன்னிறுத்துவது போன்றே எனக்குத் தோன்றுகின்றது. இதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளிற்கு உதவியாக இருந்தவர்கள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. அவர்கள் தமக்குள் அணிபிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குழப்பும் மற்றும் வசைபாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இதுவரைகாலமும் தமிழீழ மக்களின் துன்பம் களையத் தாங்கள் பாடுபடுவதாக் கூறியவர்கள் இன்று மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் துன்பச் சுமையைச் சுமக்க மேலும் வலுவற்றவர்களாக இருக்கும் வேளையில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியவர்கள் அற்பத்தனமாக நடந்து கொள்கின்றார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடானது இவர்கள் எதற்காக இவ்வளவு காலமும் ஒட்;டியிருந்தார்கள் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகின்றது. இவ்வாறான இப் பெரியவர்களின் செயற்பாடானது ஓர் முற்றிற்கு வரவேண்டியுள்ளது. இன்று ஈழத்தமிழனம் தனக்காக தமிழர் நலனையே நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த தலைவர்களை இழந்த நிலையில், மீண்டும் ஓர் தலைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறான தலைமைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களாவது கடந்து முடியும் என்பது என் கணிப்பு. இதற்குள் தமிழின அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையும் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு எமக்குள்ளே நாம் குடுமிப்பிடிச் சண்டை செய்துகொண்டிருக்கும் சூழலில் எவ்வாறு இத் தலைமையை அடைவது, இத் தலைமைப் பொறுப்பினை யாரால் வகிக்கமுடியும் எனக் கேள்விகள் எழும் போது அதற்கு விடையாக அமையப்போவது எது. ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களின் பின் ஓர் சிறந்த வலுவான தலைமை அமைந்தால் மட்டும் போதாது, அது தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும். தனக்குப் பின்னர் தலைமையேற்பதற்கு என தொடர்ச்சியான தலைவர்களை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெறவேண்டுமாயின் இதற்குத் தகுதியானது தற்போது பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட இளையவர்களினாலேயே முடியும். அதுவும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் உருவாக வேண்டும். இதனை நான் இங்கு குறிப்பிடும் போது அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கலாம் அல்லது என்னைப் பைத்தியக்காரன் எனலாம். வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்து காட்டிய தலைவனை நான் அடையாளம் காட்டுகின்றேன். பதினாறு வயதில் துப்பாக்கியுடன் புறப்பட்ட அத்தலைவன் முப்பது வயதிலே தமிழீழப் போராட்டத்தின் காவலனாக முப்பத்து மூன்று வயதிலே பொறுப்பேற்கின்றான் (ஏனைய போராட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலை அரங்கில் மக்கள் செல்வாக்கை இழந்து தடைவிதிக்கப்பட்ட காலம்). அதனாலேயே இவ்வாறு ஓர் பலங்கொண்ட அர்ப்பணிப்புக் கொண்ட விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த முடிந்தது. இளையவர்களிடம் இருந்து அர்ப்பணிப்புள்ளவர்களை, சுயநலம் அற்றவர்களை மற்றும் கொள்கைப் பற்று உள்ளவர்களை இப்போதே அடையாளம் அவர்கள் பின்னால் அணிவகுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு உலகெங்கும் உள்ள தமிழர்களிற்கு உண்டு. முதிர்ந்த தலைவர்களாக இருக்கலாம் ஆயினும் எதிர்கால தமிழ் இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இளையோரிடம் தங்கள் தலைமைப் பொறுப்பினை அவர்கள் கைமாற்றவேண்டும். இன்று இக்குறிப்பிட்ட வயதெல்லையில் இருப்பவர்களால் மட்டுமே நிலையான தலைமைத்துவத்தினை நீண்டகாலத்திற்கு வழங்கி தொடர்ந்து தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அத்துடன் நீண்டகாலத்திற்கு திறனுடன் செயலாற்ற முடியும் என்பது என் கணிப்பு. அத்துடன் இளையவர்களைச் சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணக்கூடியவாறு இருக்கும். இளையவர்களை முன்னே விட்டுவிட்டு பின்னால் நின்று அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது இவ்வாறு தான் இதனைச் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதை நிறுத்தவேண்டும். தமிழினம் இன்று நிற்கும் இவ் இக்கட்டான நிலையில் இருந்து மீளவேண்டுமாயின் இளைவர்களை அவர்களது வழியில செயற்படவைத்து அவர்களிற்கு பக்கதுணையாக நிற்காவிடின் தமிழினம் மீளாது என்பதுறுதி. எவ்வாறு இளையவர்களால் எழுபதுகளின் முற்பகுதியில் துணிவுடன் அப்போதைய முதிர்ந்த தலைவர்களை எதிர்த்து அனைவரையும் எதிர்த்து சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதைப் போன்றதொரு போராட்டம் அடக்க நினைப்பவர்கள் அனைவரையும் எதிர்த்து முன்னெடுக்கப்படவேண்டும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் எதற்காக உயிர்விட்டார்கள். தமிழீழம், தமிழினம் என்றதற்காக மட்டுமே உயிர்விட்டார்கள். தாயிருந்தும் தந்தையிருந்தும் கூடப்பிறந்து வாழ்ந்த சோதரர்கள் தானிருந்தும் அக்கம் பக்கம் அயலிருந்தும் கூடிக் குலாவிய சொந்தமிருந்தும் எதற்காக வெடிசுமந்தார் காரிருள் வேளையிலும் ஆழக் கடல் பரப்பினிலும் கடும்மழைக் குளிரிலிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தேகமெல்லாம் வலிக்கையிலும் எதற்காக வெடிசுமந்தார் வெடியாகிப் போகையிலே – கண்ணெதிரே அம்மா வந்தாலென்ன அப்பா வந்தாலென்ன ஒற்றுமையாய் ஒன்றாக பள்ளிசென்ற தம்பி வந்தாலென்ன தங்கை வந்தாலென்ன நட்பு வந்தாலென்ன மெல்லியதாய் புன்னகைத்து கையசைத்து வார்தையேதும் சொல்லாது சென்றிட்ட கரும்புலிகள் தியாகங்கள் தியாக வேள்விகளில் குளிர்காய்ந்தநாம் இனியேனும் சிறுதுரும்பாவது அசைக்க முயல்வோம். இளையோரின் பின்னாலே அணிவகுத்துத் தயாராவோம்.

ஒழுக்கம்

Sunday, August 23, 2009 · 0 comments

இன்று இணையத்தளத்தில் ஓர் செய்தி படித்துவிட்டு அச் செய்தியுடன் தொடர்புடைய விடயம் தொடர்பாக எம் மனதிற்குட்பட்ட விடயத்தில் ஆராய்ச்சியில் இறங்கியிருந்தேன். அப்போது அதற்கு எவ்வகையிலும் ஒன்றிணையாத வகையில் இன்னொரு விடயத்தின் மீது எனது கவனம் சென்றுகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது.
ஒழுக்கம், உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தினாலும் கடைப்பிடிக்கப்படும் ஓர் மிகச் சாதாரண விடயம்.
இது இனத்திற்கு இனம், உயிரினத்திற்கு உயிரினம் மற்றும் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும்.எம் மனித இனத்திலே பல்வேறு பட்ட மனிதக் குழுமங்களும் பல்வேறு வேறுபட்ட சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று முரணான விதிகளை வகுத்து ஒழுகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே ஒவ்வொரு நாடுகளும் அவற்றிற்கென்று குறிப்பான ஒழுக்கங்கள் நடைமுறைகளைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விடயங்களில் பொதுப்படையான முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படைகள் விடயத்தில் உயர் ஒழுக்கம் கடைப்பிடிக்கடுவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் சிறீலங்கா, இந்தியப் படைகளினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்கமீறல்களும் என்மனக் கண்முன்னே வந்து தொலைக்கிறது.
இம்மனவோட்டமே என்னை இன்று இது தொடர்பாக அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உந்தித்தள்ளியது.
இவ்வாறு ஓர் ஒழுக்கங்கெட்ட படைகளிற்கு எதிரான வீரச்சமராடிய தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கமானது அவர்களை எல்லாரினையும் விட மேலே உயர்த்துகின்றது.
மே மாதம், இரண்டாம் மூன்றாம் கிழமைப் பகுதிகள், போரின் உச்சக்கட்டம். ஒவ்வொரு எறிகணையிலும் உயிர்கள் பறிகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மே மாதம் 19ம் திகதிக்குப் பின்னர் சிறீலங்கா அரசு தமிழீழ மாவீரர்களின் படங்களை வெற்றிக் களிப்புடன் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. என் மனமோ துன்பச் சுமையில் நசுங்கிக் கொண்டிருந்தது. இருந்தும் பெருமை கொண்டது. அக் களத் தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கங்களை எண்ணி.
சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்ட புகைப்படங்களில் இருந்த படங்களில் இருந்து ஒவ்வொரு மாவீரனின் முகத்தையும் கவனிக்கின்றேன். ஒழுங்காக சவரம் செய்யப்பட்ட முகம். எவ்வளவு ஓர் கட்டுப்பாடான ஒழுக்கம் பேணப்பட்டிருக்கவேண்டும்! அடுத்த நொடி உயிர் இருக்குமோ இல்லையோ என்று தெரியாத நிலை. ஆயினும் தங்கள் படை ஒழுக்கத்தை எவ்வளவு இறுக்கமாகப் பேணியுள்ளார்கள்.
சாதாரண போராளிகள் மட்டுமன்றி தலைவர்கள், பொறுப்பாளர்கள் என்று அனைவரும் பேணியுள்ளார்கள்.
கடந்த முப்பத்திமூன்று ஆண்டுகளிற்கு மேலாக முனைப்புப் பெற்று, இத்தனையாயிரம் போராளிகள் கட்டுப்பாட்டுடன் கண்ணியத்துடன் கட்டிக்காத்துப் போராடிவந்த வேளையில் அவர்கள் தியாகத்தை அடகு வைத்து நாம் எவ்வாறெல்லாம் பேசுகின்றோம்.
தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தை வரிந்து கொண்டு போராடியவர்கள் வழியில் நாமும் போராடவேண்டாமா.
யார் பெரிது என்ற பேதமின்று அனைவரும் ஒழுக்கமுடன் எம் மாவீரர் தடம் பற்றி எமக்காய் அவர்கண்ட கனவுகளை நாம்சுமந்து ஒன்றாகி நிற்போம். எதிரியின் தடை தகர்ப்போம். எம் தேசம் மீட்போம்.

ஆகஸ்ட் 13

Thursday, August 13, 2009 · 0 comments

13ம் இலக்கம் என்றாலே மேற்குநாட்டினரிற்கு கொஞ்சம் கசப்பான இலக்கம். அதுவும் அவர்கள் கிருத்தவர்கள் என்றால் 13ம் இலக்கத்தில் எந்த நிகழ்வுகள் செய்வதனையும் தவிர்த்து வருவார்கள். ஏன் பெரும்பாலான இடங்களில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் 13 ஆவது தளத்தினைத் தவிர்த்து 12 இற்குப் பிறகு 14 ஆவது தளம் என்று சுட்டிக்காட்டுவார்கள். இவ்வாறு மேற்கு நாட்டினரிடையே இருந்த இப் பழக்கம் கிழக்கு நாட்டினரிற்கும் தென்னாசிய நாடுகளிற்கும் மேல்நாட்டு ஊடகங்களின் வாயிலாக உட்புகுத்தப்பட்டுள்ளது.

சரி இதனை ஏன் இன்று அதுவும் ஆகஸ்ட் 13 என்று தலைப்பிட்டுவிட்டு இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி உங்கள் அனைவர் மனங்களிலும் எழுவது தவிர்க்கமுடியாதது.
ஆம் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட இவ்விலக்கம் நெடுங்காலமாக விசித்திரமான மனிதர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல என்று சமூகத்தில் ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கான நாளாக பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களின் அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டிலிருந்து இது கடைப்பிடிக்கப்படுகின்றது.
20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கு சாத்தானின் தொடர்பு உண்டு என்று கூறி அவர்களை இச் சமூகம் ஒதுக்கிவைத்திருந்தது. ஆயினும் இன்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் அதிபராகப் பதவியேற்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் பராக் ஒபாமா இடதுகைப் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுகைப் பழக்கம் என்பது வலது கைக்குப் பதிலாக இடது கையைப் பாவிப்பது தானே என்பது போன்று சிறியதொரு மாற்றமாகத் தோன்றினாலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது மிகவும் உண்மையான விடயம்.
இதற்கு சிறிய ஓர் உதரணமாக நாம் பயன்படுத்தும் கணினியின் மெளஸ் (Mouse) இனை எடுத்துக்கொள்ளலாம். அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது left button. சுட்டுவிரலினால் இலகுவான பயன்படுத்துவதற்காக அவ்வாறு செய்துள்ளார்கள். ஆனால் இதனை இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சுட்டுவிரல் தவிர்ந்த விரலினைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனைச் சரிசெய்யும் ஓர் உத்தியாகவே இடதுகைப் பழக்கம் உள்ளவர்களான அப்பிள் கணினியை வடிவமைத்தவர்கள் அதன் mouse இற்கு ஒரேயொரு button இனை வைத்து வடிவமைத்துள்ளார்கள்.
இடதுகைப் பழக்கம் என்பது ஒரு நோயல்ல, அல்லது அவர்களை ஒதுக்கி வைப்பதற்கு அவர்கள் சாத்தானிடம் இருந்து வந்தவர்களும் அல்ல. அது மரபணுவுடன் சம்மந்தப்பட்ட விடயம். அத்துடன் அவர்களைச் சிறுவயதில் சுற்றியுள்ளவர்களால் ஏற்படும் மாற்றம். ஆதலால் இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அவர்களின் செயற்பாடுகளில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முனையாது அவர்களை அவர்களது செயலில் ஈடுபட நாம் அனுமதிக்க வேண்டும்.
நாம் இடது கைப்பழக்கம் உள்ள குழந்தை என்று ஓர் குழந்தையை வலது கைப் பழக்கம் உள்ள குழந்தையாக மாற்ற முனைவோமாயின் அக் குழந்தையின் மனநிலை குழப்பமடையலாம். அது அக் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்குக் கூட இட்டுச்செல்லலாம்.

ஆயத்த நிலை.....

Wednesday, August 12, 2009 · 0 comments

அனைவருக்கும் வணக்கம், கடந்த காலங்களில் பொது இணையக் கருத்துக்களங்களில் எழுதிவந்த நான் மிக அண்மைக்காலங்களில் அவற்றினைத் தவிர்த்து வந்திருந்தேன். ஆயினும் மீண்டும் எனது எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவருடனும் திறந்த மனதுடன் பகிரந்து கொள்ளலாம் எனும் எண்ணத்துடன் இவ் வலைப்பதிவுப் பக்கத்தினை ஆரம்பிக்கின்றேன். என்னால் பகிரப்படும் கருத்துக்களிற்கு நீங்க ஏதாவத கூறவிரும்பின் அதனை பின்னூட்டமாக இடலாம். பின்னூட்டங்கள் நாகரிகமான சொற்பிரயோகங்களுடன் இருப்பின் அவை என்னைத் தூற்றுவனவாக இருப்பினும் பிரசுரிக்கப்படும் :)

நட்புடன்,

OpenTalk.

On the mark.. set... GO!

Sunday, August 09, 2009 · 0 comments

Hi everyone,


Since I had few blogs couple of years in back and gave up writing on the public places recent years. Once again, I decided to write and share my thought to the community as my two cents.

It's upto everyone to take it serious or just to ignore, but I just want to share how I feel, what is my idea, some thoughts that how can we all work together, what are the needs we have in the community, how we serve better to the community.

Just share your ideas and thoughts....

Join the hands... work together.. build a better society.....

Regards,
OpenTalk.

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator