39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள்

Wednesday, February 23, 2011 · 0 comments

குடும்பத்துடன்....
இந்தியாவின் வடபிரதேசத்தில் உள்ள ஓர் ஊரில் 39 துணைவிமார், 94 பிள்ளைகள் மற்றும் 39 பேரப்பிள்ளைகளுடன் 66 வயது மனிதர் வாழ்ந்து வருகின்றார்.

பர்மா மற்றும் பங்களாதேஸ் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மிசோரம் எனனும் மலைப்பகுதிக் கிராமத்திலேயே இவர் வாழ்ந்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நூறு அறைகளைக் கொண்ட நான்குமாடிக் கட்டடம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமையறையை மாத்திரம் கொண்டிருக்கும் இக் கட்டடத்தில் இவரது துணைவிகள் முறையெடுத்து சமைத்து வருகின்றனர். திருமணம் முடித்த இவரது மகன்களும் இக் கட்டடத்திலேயே வேறு வேறு அறைகளில் வாழ்கின்றார்கள்.

"நான் ஒரு தடவை ஒரு வருடத்தில் பத்து திருமணங்கள் செய்திருக்கின்றேன்" என்கிறார் இச்சாதனைக்குச் சொந்தக்காரரான சியோனா சானா. அதனுடன் "இப்பொழுது கூட எனது குடும்பத்தினை விரிவுபடுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன், திருமணம் செய்வதற்கு எத்தகைய செயலையும் செய்யத்தயாராக இருக்கின்றேன்" என்றார்.

அனைவரும் தங்கும் வீடு...
துணைவியருடன்..

தகவல்: TeleGraph

அலட்சியமாய் இருப்பதன் விளைவு

Thursday, February 17, 2011 · 0 comments

கனடாவில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இராணுவத் தளபதி ஒருவர் தொடராகப் பெண்களது உள்ளாடைகள் திருடியதும் இரண்டு பெண்களைக் கொலை செய்ததும் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அவ் இராணுவத் தளபதி தன் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன் அவரிற்கு இரட்டை ஆயுட்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கனடிய முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான செய்திகளின் தொகுப்பிற்கு இங்கே செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Russell_Williams

இன்று ஒரு தொலைக்காட்சித் தொடரினைப் பார்த்த போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவின் மாநிலம் ஒன்றில் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். அவ்வொளித்தொகுப்பினை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.


அத்துடன் இதற்கு ஓர் காரணமாக அமையும் நிகழ்வு ஒன்று தொடர்பாக நான் முன்னர் எழுதிய ஆக்கம் ஒன்றினை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

"சிறுவர்களும் உறவினர்களும்"http://justopentalk.blogspot.com/2010/02/blog-post_24.html

உலகக் காதலர் தினம்

Tuesday, February 15, 2011 · 0 comments

பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும்
பெப்ரவரி 14ம் திகதி
பூமிப்பந்தின் நாடுகளெல்லாம்
பூப்பெய்திய திருக்கோலம்



உலகக் காதலர் தினம்

வான வேடிக்கைகளின் பவனி
வாழ்த்து மடல்களின் பரிமாற்றம்
இதழ்களின் முத்த முத்திரியை
விருப்பமுடன் இடம்மாற்றும்
லீலைகளில் காதலர்கள்

காதல்தான் உலகம்
காதல்தான் வாழ்க்கை
காதல்தான் உயிர்
காதல்தான் மனிதன் என
ஊடகங்களின் மொத்தமான
உரத்த பறையடிப்பு

சர்வம் காதல் மயம் - என்னும்
கோசத்தை ஏந்தி
சங்கீதமாய் உலாவரும்
அன்றைய காற்று

இளமைதான் தேசங்களின்
இயங்கு நிலைச் சக்தி - இருந்தாலும்
அவர்களுக்கும் காதல்தானாம் முத்தி

சூரியனின் காதல்தான் தாமரை
பனித்துளியின் காதல்தான் புல்நுனி
நேரிய நல்வாழ்க்கைப் பாதைக்கே
நிழல்தரும் மேகங்கள் காதல்தானாம்

காதல் ஒரு கடவுள்
தொடுகை இல்லை
தெரிவதில்லை
நுகர்வதில்லை
அறிதலில்லை
உணர்தல் மட்டுமே முடியும்

அன்றுதான் சந்தோச ரேகைகள்
உலகெங்கும் பரவும் நாள்
மத்தாப்பாய் இன்பங்கள்
மனசெங்கும் நிரவும் நாள்
காற்று மண்டலக் கூடுகளிலெல்லாம்
கனவுப் பறவைகள் குடிபுகும் நாள்

இதுபோலத்தான் அன்றும்
ஆண்டு 2001
பெப்ரவரி 14
உலகத்து நாடுகளிலெல்லாம்
அன்றும் தான் காதலர்தினம்
உள்ள+ரில்
தமிழர்களிற்கு மட்டும்
ஓய்வான காலமது

பூமித்தாயின் நெற்றிப் பொட்டாய்
உருவாகத் துடிக்கின்ற ஒரு நாடு
தமிழீழம்
ஆமி என்னும் சிங்களப் படைகளினால்
ஆக்கிரமித்தல் கண்ட ஒரு நாடு
தமிழீழம்

உலகெங்கும் அன்று காதலர்தினம்
உள்ள+ரில் தமிழரிற்கு ஓய்வான காலம்

உலகத்தை எங்கள் மேல்
கவனிக்கச் சொல்லி
ஒருதலைப் பட்சமாய்
போரோய்வு பேணி
அழிவுள்ளும் சலியாது
வாழ்கின்ற தமிழர்
அன்றைக்கும் அமைதியாய்
இருந்திட்ட காலம்

பளைப்பகுதியின் காவலரண்
துப்பாக்கி இருந்தும்
சுடாத எம் படையணிகள்
அழைப்பின்றி வருகின்ற
பகைவரது முன்னேற்றம்
ஆறுதலாய் கவனிக்கும்
எம்மவரின் மதிநுட்பம்

இருந்தாலும் என்ன செய்வது?

பேரினவாதிகளின் பெருஞ்சமருக்காய்
எறிகணைகள் மழையாகி
ஊரையே உலுக்கியது

எம்மவரும் பாதுகாப்பாய்
நிலையெடுக்கும் நேரத்தில்
ஒவ்வொரு வெடியதிர்வும்
உள்நுழையத் தொடங்கியது

அம்மா….

என் நண்பன் ஒருவனது
உயிர் உறையும்
ஒர் அலறல்

கரும்புகை மண்டலத்தில்
கண்ட காட்சியிலும் கரிப்படிவு
ஒரு கால் சிதைந்த நிலையில்
என் போராளித் தோழனின் திருவுருவம்
காலில் இருந்து குருதியும்
முகத்தில் இருந்து வியர்வையும் வழிந்தபோதும்
புரட்சியின் தூய்மையை
அந்த உருவம்
சிந்திக் கொண்டிருந்தது

“நாம் சண்டையை விரும்பவில்லை
உயிர்வாழ வேண்டுமானால்
சண்டையை விட வேறுவழியில்லை”
அவன் அணிந்திருந்த
வரிச்சீருடையில் மறைந்திருந்த வரிகள்
இதுதானோ

இரவு வானொலிச் செய்திகளில்
இதயங்களை மகிழ்வித்த
காதலர் தினம்
சிறப்பு நிகழ்ச்சிகளாய்

உண்மைதான்

உலகெல்லாம் அன்று
காதலர் தினம்
என் உயிர்த் தோழனுக்கோ
அது கால் இழந்த தினம்

இப்படித்தான் எங்களது வாழ்க்கைப்பாடு
இனி வருகின்ற
மனித உரிமைகள் தினத்தன்று
எங்கள் உயிர்கூடப் பறிக்கப்படலாம் - ஆனால்
ஈழத்தமிழனை ஒருபோதும்
காலச் சருகுகள் மூடாது – மாறாக
காலைச் சூரியன்
தினம் பாடும்

-கவியாக்கம்: கு.வீரா

தவறான வழித்தடத்தில் கார் ஓட்டிய 83 வயது முதியவர்

Thursday, February 10, 2011 · 0 comments

ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் ஓடும் பக்கத்திற்கு எதிராக தனது வாகனத்தினை 83 வயதுள்ள முதியவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இக் காட்சியினை அவ்வீதியில் பயணம் செய்த இன்னொருவர் தனது தொலைபேசி மூலம் ஒளிப்படமாக்கியுள்ளார்.

மிகவும் ஆபத்தான இவ்வாகன ஓட்டுதலின்போது அம் முதியவர் இன்னொரு வாகனத்துடன் மோதி அதன் பின் வீதியைப் பிரிக்கும் தடுப்புச் சுவருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார். இச்சம்பவத்தின் போது எவரும் பாரிய காயங்களிற்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விலையா(போ)கும் ஆண்கள்

Monday, February 07, 2011 · 1 comments

தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது இடம்பெற்ற சிறிய சம்பவம் ஆண்கள் விலைபோகின்றார்களோ என்ற கேள்வியை என் மனதிலே எழுப்பியுள்ளது.

திருமணம் என்னும் சந்தையில் ஆண்கள் வியாபாரப் பொருட்கள் ஆவதும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டுக்காரர் அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் மிகவும் ஒரு சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டுள்ளது. இவ்வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களினை ஆண்கள் தாங்களே நிர்ணயிக்கின்றார்களா அல்லது அவர்களது பெற்றோர் நிர்ணயிக்கிறார்களா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.

அதனைவிட ஓர் திருமணமாகும் வயதில் உள்ள ஆணிற்கான விலை தொடர்பாக அவர் வசிக்கும் இடமும் தகுந்த இடம் வகிக்கின்றது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களிடையே புலம்பெயர்ந்து மேற்குலகில் வசிக்கும் ஒரு ஆணிற்கு ஒரு விலையும் உள்நாட்டிலேயே இருக்கும் ஆணிற்கு ஒரு விலையும் குறிக்கப்பட்டுள்ளது. அவ்விலையினை விடக் குறைவாக அல்லது சீதனமே வாங்காது ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முன்வந்தால் அவ் ஆணிற்கு ஓதோ ஒரு குறை இருப்பதாகவும் எண்ணுகின்றார்கள்.

இச் சீதனம் என்னும் இடியப்பச் சிக்கலில் அகப்பட்டுப் பலரது வாழ்வும் சீரழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானதும் அனைவரும் அறிந்த உண்மையும் ஆகும். இது தொடர்பாகப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

இதிலே ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படும் விடயமானது தனது மகனை மருமகள் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என ஆணினைப் பெற்ற பெற்றோர் குறைபடுவதும் தமது சகோதரனை அவனின் துணைவி தம்மிடம் இருந்து பிரித்து விட்டாள் என சகோதரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டும் ஆகும்.

என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் அடிப்படையில்லாக் குற்றச்சாட்டாகும். திருமணம் என்னும் சந்தையில் ஆண் ஆனவன் விற்கப்பட்டதன் பின்னர் அவ்விற்கப்பட்ட பொருளிற்கான உரிமையும் அதை வாங்கியவரிற்கே சொந்தமாகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது சீதனம் கைமாற்றல் நடைபெற்றவுடன் அவ் ஆண்மகனானவன் அப் பெண்ணிற்கே சொந்தமாகின்றான். ஆதலால் அவனை அவனது திருமணத்திற்கு முன்னரான வீட்டிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமையும் அப் பெண்ணிற்கு வந்து சேர்கின்றது.

அவ்வாறு பிரித்தெடுக்காது அவ் ஆணின் மீது தாங்களும் உரிமை கொண்டாட வேண்டும் என்று அவனது குடும்பத்தார் முடிவு செய்வார்களேயானால் அவர்கள் சீதனம் என்னும் பேச்சினை எடுக்கக் கூடாது. இச் சீதனப் பேச்சிற்கு ஆண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பங்களிக்கிறார்கள் என்பது மிகவும் மறுக்க முடியாத உண்மையாகும். தாமும் இவ்வாறு சீதனம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து அவர்கள் அதில் மும்மரமாக இருப்பது மிகவும் கவலைதரக் கூடிய விடயமாகும்.

அத்துடன்இ சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்யவேண்டும் என அடம்பிடிக்கும் ஆண்களைச் சோம்பேறிகள் என்றே கொள்ளவேண்டும். தாங்கள் திருமணம் முடித்து மகிழ்வோடு வாழவேண்டும் என்பதற்கா ஒரு பெண் கைநிறையப் பணத்துடன் வரவேண்டும் என எண்ணுவது மிகவும் தவறானதாகும்.


மிகவும் சிறந்த ஓர் காட்சிப்படுத்தல்


பாடல் ஒன்று


பேசா வார்த்தைகள்

· 0 comments

இரண்டு உள்ளங்களிற்கிடையே பேசப்படாத வார்த்தைகள் பேசப்படும் போது....

ஒரு இரசிகனின் நிலை

Monday, January 31, 2011 · 0 comments

நடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.

ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்க விளைகின்றார்கள். இதனால் இழக்கப்படுவது இவ் அப்பாவிகளின் பணம் மட்டுமல்ல, அவர்களது நிம்மதியும் கூடவே இழக்கப்படுகின்றது. ஒரு நடிகனின் படம் ஓடாவிட்டாலே அதற்கு எதிராகக் கருத்துக் கூறினாலோ ஏதோ தன்னுடைய கௌரவம் குறைந்து விட்டது போன்றே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஏற்கனவே எத்தனையோ புறக்கணிக்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்களுள் கட்டுண்டு கிடக்கும் இச் சமூகத்தில் இந் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்கும் பழக்கமும் வேரூன்றி வருகின்றது. இதற்குக் காரணம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள நிலைமையா அன்றி தேவையற்ற பிடிவாதக்குணமா என்பதனை நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கும் புண்ணியவான்கள் தான் பதிலளிக்க வேண்டும்.


உரிமைகோரல்

Tuesday, January 25, 2011 · 0 comments

அண்மைக்காலமா மற்றையவர்களின் வேலையைத் தங்களது வேலையாக உரிமை கோரும் படலாம் வேகமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்து கொண்டு இணையத் தளச் செய்திச்சேவை தருகின்றோம் என்று புறப்படுபவர்களின் திருட்டினைச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தவகையில் இன்று ஓர் இணையத்தளத்தில் நடந்த திருட்டினை உங்கள் முன் வைப்பதே இப் பதிவின் நோக்கம்.


கடந்த வார விடுமுறையில் ரொறன்ரோ பெரும் பிராந்தியத்தில் நடைபெற்ற கனடியத் தமிழர் திரைப்படவிழா நிகழ்வு தொடர்பாக அந் நிகழ்வினைப் புகைப்படம் பிடித்தவர் தனது இணையத்தளத்தில் படங்கள் தரவேற்றியிருந்தார். அவ்விணையத்தளத்திலிருந்து அப் படங்களிற்கான இணைப்பு இங்கு உள்ளது நினைவுகள் .

அதேவேளை தமிழ்த்தாய் என்னும் இணையத்தளம் மேலே குறிப்பிட்ட புகைப்படப்பிடிப்பாளரின் தளத்தில் இருந்து அத்தனை படங்களையும் தரவிறக்கித் தங்களது watermark இனை உள்ளீடு செய்து ஏதோ தாங்கள் நிகழ்விற்குச் சென்று பிரத்தியேகமாகப் படங்கள் எடுத்தது போன்று தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். அவ்விணைப்பு இங்கே.

இப்புகைப்படங்களினைத் தங்களின் watermark உள்ளீடு செய்யாது வெளியிட்டிருப்பின் மற்றையவரிற்கு சொந்தமான புகைப்படங்கள் அவருடையதாகவே இருந்திருக்கும். அதைவிடுத்து அவரது முழுப்புகைப்படத்திற்கும் தங்கள் watermark இனை உள்ளிட்டு அவரது வேலையைத் தங்களதாக்கியுள்ளார்கள். அதன் உரிமையாளரிற்கு குறைந்தது ஒரு நன்றி சொல்லியாவது வெளியிட்டிருக்கலாம். இவர்கள் எல்லாம் சமூகத்திற்கு செய்தி தருகிறார்களாம். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

முழுவதும் இயற்கை வளங்களில் இயங்கும் பண்ணை

Friday, January 21, 2011 · 0 comments

இந்தியாவில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் அதன் நாளாந்த நடவடிக்கைக்குத் தேவையான வளங்களை இயற்கை வளங்களில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இது தொடர்பாக ஒளித் தொகுப்பு ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது. அவ்வொளித் தொகுப்பிற்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கெஞ்சும் விஜய்

Monday, January 17, 2011 · 0 comments

இடியப்பச் சிக்கலில் இருந்து ஒருவாறு விடுவித்துத் தனது காவலன் திரைப்படத்தைத் திரையரங்குகளிற்கு அனுப்பி வைத்த நடிகர் விஜய் அதனுடன் சேர்த்துத் தனது இரசிகப் பெருமக்களிற்கு கெஞ்சும் ஒளிப்பதிவினையும் அனுப்பிவைத்துள்ளார்.

இங்கு இணைப்பில் இருக்கும் ஒளிப்பதிவில் நடிகர் விஜய் இரசிகர்களிற்கு அனுப்பிவைத்த ஒளிப்பதிவையும், வில்லுப் படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில் பத்திரிகையாளர்களிற்கு அவர் வழங்கிய 'மதிப்பும்' கலவையாக்கப்பட்டுள்ளது. அவ்வொளிப்பதிவு உங்கள் பார்வைக்கு........

சோழர்களினால் முடியாது போனது எதனால்?

Friday, January 14, 2011 · 1 comments

தமிழ் இனத்து மன்னர்களில் பலர் பல்வேறு நாடுகளையும் தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்து அரசாண்டதாக வரலாற்றுப் புத்தகங்களிலும் ஏடுகளிலும் படித்திருக்கின்றோம். தாய்லாந்து, பர்மா, கம்போடியா வரையும் தமிழர்களின் அரசாட்சி பரந்து விரிந்திருந்ததாகவும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் கட்டடக் கலை எச்சங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் அதனை எடுத்துக் காட்டுவதாகவும் பல்வேறு நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. “கடாரம் வென்ற சோழனவன்….” ஏன ஓர் ஈழத்துப் பாடல் ஒன்றும் கூறுகின்றது.

இவ்வாறெல்லாம் பல தேசங்களிற்கும் சென்று அரசாண்ட தமிழர்களால் ஏன் ஒரு குறுகிய இடத்துடன் மட்டுமே நின்றுகொள்ளவேண்டி இருந்துள்ளது. மேலைத் தேயத்தவர்களைப் போல உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தங்கள் கொடியை நாட்ட ஏன் தமிழ் மன்னர்களினால் முடியாது போனது

சிறுவயதில் வரலாற்றுப் புத்தகங்கள் படிக்கும் போது இக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. வெளிநாட்டுப்போரியற் கலைகளிற்கு ஈடுகொடுத்துப் போராட எம் தமிழ் மன்னர்களினால் முடியவில்லை என்பதனால் என்று சிலர் வாதம் முன்வைக்கலாம். அவ்வாறாயின் முன்னேற்றமில்லாத தன் போரியல் நுட்பத்தினால் பல காலமாக பண்டாரவன்னியன் தன் பிரதேசத்தின் இருப்பினை வெள்ளையர்களிடம் இழக்காது பாதுகாத்து வைத்திருந்தானே என என் மனம் திரும்பக் கேட்கும் கேள்விக்கு விடை கிடையாது.

பல காலத்திற்குப் பின்னர் மீண்டும் இக் கேள்விகள் என்னை எட்டிப் பார்த்த போது வீதியில் கொட்டிக் கிடந்த பனிகளின் ஊடாக வானிலை அவதானிப்பு நிலையம் விடுத்திருந்த கடுங்குளிர் எச்சரிக்கையைப் புறக்கணித்தவனாக நடந்து கொண்டிருந்தேன்.

காலையில் வீட்டை விட்டு வெளிக்கிடும் போது வானிலை அவதானிப்புப் பற்றிய அறிக்கையைப் பார்க்காது விட்ட எனது மடத்தனம் அப்போது தெரிந்தது. சாதாரண நிலையில் இருந்த குளிர்நிலை சடுதியாக சுழியத்திற்குக் கீழே கிட்டத்தட்ட பதினாறு பாகை செல்சியஸ் குறைந்திருந்தது. கடின குளிருக்குத் தகுந்த மாதிரி உடையணியாது சாதாரண குளிர் தாங்கும் உடையுடன் வெளியே சென்றிருந்த எனக்கு வீடு திரும்பும் போது போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த வேளையில் குளிரில் விறைத்திருந்த மண்டையில் மின்னல் அடித்தது போன்று ஒரு உணர்வு. ஏதோ பலநாள் தொலைத்துவிட்ட பொருள் கைகளில் கிடைத்து விட்டது போன்ற ஒரு மகிழ்வு

இக் குளிர்கால நாட்டில் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் என்னால் இக்குளிரினைத் தாங்க முடியாது இருக்கும் போது எவ்வாறு இக் குளிர்பற்றி நேரடியான அனுபவம் எதுவும் இல்லாத எம் முன்னோடித் தமிழ் மன்னர்களினால் தாங்கியிருக்க முடியும். அந்தக் காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட ஆடையமைப்பு இக் கடும் குளிரினைத் தாங்கும் விதத்தில் அமைந்திருந்ததாக என்னால் அறிய முடியவில்லை

சோழர் இராட்சியம் விரிந்திருந்த இடங்கள்
தமிழ் மன்னர்கள் தங்கள் கொடிகளை நாட்டிய நாடுகள் வெப்பமண்டலத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. வெப்பமண்டல சூழலிற்கு ஏற்ப உடையணிந்து சென்ற மன்னர்கள், தளபதிகள், மற்றும் போர்வீரர்களினால் குளிர்ப் பிரதேச நாடுகளில் தங்கள் வீரத்தினைப் பதிக்க முடியாது போய்விட்டது. ஆயினும் குளிரினைக் கண்டு பழகிய மேற்கத்தேயவர்களினால் வெப்பப் பிரதேசங்களிலும் தங்கள் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக்காட்ட முடிந்துள்ளது. பல நாடுகளையும் தங்கள் வசம் கொண்டுவந்து அனைத்துப் பகுதியிலும் இருந்து படைதிரட்டி வந்த மேலைத்தேய நாட்டவர்களிற்கு எமது மன்னர்களைத் தாக்கி எமது பிரதேசங்களை வசப்படுத்துவது இலகுவாய் அமைந்து விட்டது

இதே போன்ற முறையினிலேயே இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியப் படைகள் இரசியப் படைகளிடம் தோல்வியடைந்த சந்தர்ப்பமும் எண்ணங்களில் வந்து போனது.

காலநிலையை மனிதர் வெற்றிகொள்ள முனையினும் ஒரு காலத்தில் ஒவ்வொருவர் வாழ்ந்த காலநிலைச் சூழல் அவர்கள் வெற்றியாளர்களாக மாறக் கைகொடுத்துதவியுள்ளது.   

Apple CEO Steve Jobs' 2010 compensation package remains $1

Saturday, January 08, 2011 · 0 comments

Apple Inc. CEO Steve Jobs' compensation package remained the usual $1 in fiscal 2010, but the value of the shares he owns has skyrocketed amid the company's ongoing success with introducing shiny new gadgets many people come to find indispensible.

Apple said in a filing with the Securities and Exchange Commission on Friday it paid a salary of $1 to Jobs, who rejoined the company in 1997 and has overseen the company's explosive growth following the launch of the iPod, the iPhone and now the iPad.

As is customary, Jobs got no bonus or perks during the fiscal year that ended Sept. 25, 2010. Apple said it reimbursed Jobs $248,000 for company travel on his personal jet, a $90 million Gulfstream V he received as a bonus in 1999. This is well above the $4,000 Apple reimbursed its CEO in 2009, when Jobs was on medical leave for nearly six months.

Jobs, however, holds 5.5 million of Apple's shares, which gained about 60 per cent in value during the fiscal year and have continued to rise since. Apple's shares closed at $333.73 on Thursday, bringing the value of Jobs' personal holdings to $1.84 billion.

The company's net income jumped 70 per cent in fiscal 2010 to $14 billion, on revenue of $65.2 billion, an increase of 52 per cent from a year earlier thanks to strong demand for its personal gadgets and Mac computers.

Jobs, 55, has not sold any shares since he rejoined the company in 1997 following a 12-year hiatus. He has not been awarded any new equity since 2003 and is currently its largest individual shareholder. His annual salary has been $1 since 1998.

Top Apple executives, including Jobs, are employed at will, without severance or employment agreements, tax reimbursements or supplemental retirement benefits. The company also does not provide perks to the executives other than those available to non-executive employees, according to the filing.

The Associated Press compensation calculation includes salary, bonus, performance-related bonuses, perks, above-market returns on deferred compensation and the estimated value of stock options and awards granted during the year.


Yahoo News

HuffingtonPost

Wikileaks!

Friday, December 31, 2010 · 0 comments

உங்கள் தொலைபேசி ஈரமாகிவிட்டதா?

Sunday, December 12, 2010 · 0 comments

இன்று தொலைபேசியானது அனைவரதும் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் முக்கியமான ஒரு பொருளாகிவிட்டது. ஆயினும் அதனைப் பேணிப் பாதுகாப்பதென்பதும் அதனைத் திருத்துவதற்கு ஏற்படும் செலவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக ஏதோ ஒரு காரணத்தினால் ஈரமாகிவிட்ட ஒரு தொலைபேசி சில நேரங்களில் திருத்தப்பட முடியாத நிலையை அடையும் தன்மையும் காணப்படுகின்றது. அப்படி உங்கள் தொலைபேசியானது ஈரமடைந்த நிலை காணப்படுமானால் எவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிப்பதன் ஊடாக அதன் பாதிப்பினை ஓரளவிற்கேனும் குறைக்கும் முறையை இவ் ஆக்கம் படிமுறையாகத் தரவிளைகின்றது.

படி 1: கூடிய விரைவில் தண்ணீரில் இருந்து தொலைபேசியை அகற்ற வேண்டும்

படி 2: தொலைபேசி தொழிற்படுகின்றதா எனப் பார்ப்பதற்கு அதனை turn on செய்யக்கூடாது

படி 3: தொலைபேசியில் இருந்து மின்கலம், SIM card மற்றும் நினைவக அட்டை (memory card) ஆகியவற்றினை வேறாக்க வேண்டும்

படி 4: தொலைபேசி மற்றும் ஏனை பாகங்களினைத் துடைத்து இருக்கும் ஈரத்தினை அகற்ற வேண்டும் (தலை துவட்டும் இலத்திரனியல் சாதனம் போன்ற ஏனைய வெப்பப் பிறப்பாக்கிகளைப் பாவிக்கக் கூடாது: இவை மேலதிக ஈரத்தன்மையினை ஏனைய ஈரமற்ற பகுதிகளிற்கும் ஏற்படுத்தும்)

படி 5: ஒரு இறுக்கி மூடக் கூடிய ஒரு கொள்கலனில் அரிசியினை எடுத்து அதனுள் தொலைபேசியை வைத்து இறுக்கி மூடி 12 – 14 மணித்தியாலத்திற்கு வைத்திருக்க வேண்டும். அரிசி தொலைபேசியில் இருக்கும் மேலதிக நீரினை உறிஞ்சிக் கொள்ளும்.


படி 6: இதன் பின்னர் மின்கலத்தினை இணைத்து தொலைபேசி தொழிற்படுகின்றதா என்பதனைச் சரிபார்க்கலாம். இவ்வேளையும் தொழிற்படவில்லை எனின் மின்கலத்தினை அகற்றிவிட்டு தொலைபேசியை மின்னேற்றப் பயன்படும் சாதனத்தை (phone battery charger) தொலைபேசியுடன் இணைத்துத் தொழிற்படுகின்றதா எனப் பார்க்கவேண்டும். அவ்வேளை தொலைபேசி தொழிற்பட்டால் அதன் மின்கலத்தினை மாற்ற வேண்டும்.

இதன் பின்னரும் தொலைபேசி தொழிற்படவில்லையானால் தொலைபேசி திருத்துமிடம் செல்லவேண்டும் அல்லது புதிய தொலைபேசி வாங்க வேண்டும்.

Video is 'astonishing evidence'

Thursday, December 09, 2010 · 0 comments


A leading war crimes lawyer tells Channel 4 News the video apparently showing men taking part in executions in Sri Lanka is "astonishing evidence" and the United Nations must act.

Sri Lanka 'war crime' video: woman's body identified

· 0 comments

Channel 4 News can name a woman journalist as one of the victims in the Sri Lanka execution video along with damning new details of the date and location where the video was filmed.

கண்துடைப்பும் விளம்பரமும்...

Wednesday, November 10, 2010 · 0 comments

என் இனத்து மாவீரரை ஒன்றாய்க் கூடி நினைவுகொள்ளப் பல இடர்களைப் போடும் இம் மேல்நாட்டுச் சக்திகள் எவ்வாறு ஓர் மாவீரனை உளமாரத் தங்கள் நெஞ்சில் நிறுத்தி நவம்பர் 11இல் மட்டும் நினைவுகொள்வார்கள்?... அனைத்துமே விளம்பரமும் கண்துடைப்பும்! தமது பதவிகளும் அதிகாரங்களும் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஓர் இராணுவ வீரனைப் பலிகொடுக்கும் பாதகர்கள். இராணும் தங்கள் அதிகாரங்களைப் பறித்து விடாது இருப்பதற்காக அவர்களை மரியாதை செய்வது போல் பாசாங்கு செய்யும் பாவிகள்.  மாவீரன் தன் முடிவால் தன் நாட்டின் பெருமையைக் காக்கத் துடிப்பன்.... அவன் யாராக இருந்தாலும், எதிரியாக இருந்தாலும், இறந்தால் அவனுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.....




Photos allege Sri Lanka massacre

· 0 comments




Al Jazeera has obtained photographs that appear to show Sri Lankan army soldiers abusing Tamil civilians in the final days of the Sri Lankan civil war.

The pictures show various graphic scenes, with dead bodies blindfolded and hands bound, shot through the head and mounds of bodies on the back of a farmer's trailer.

It is claimed that the photos were taken in the closing months of the country’s long-running conflict that ended 18 months ago.

One of the photos shows a line of bodies, including what is believed to be the body of the son of Velupillai Prabhakaran, the leader of the rebel group, the Liberation Tigers of Tamil Eelam, or Tamil Tigers, that was defeated in the civil war.

Another photo shows the naked body of a young woman and the body of a boy, perhaps in his early teens.


Authenticity unverified

It is not possible to verify the authenticity of the images that were obtained by Al Jazeera from Tamil contacts who said the photos were handed over by someone from the Sri Lankan military. It is unclear why it has taken so long from them to surface.

The photos come to light as Gamini Lakshman Peiris, the Sri Lankan minister of external affairs, is in London to deliver as speech at the International Institute of Strategic Studies. Ethnic Tamil groups have vowed to protest outside the venue.

The Sri Lankan government has always denied allegations of war crimes and promised to take action if it finds evidence of atrocities.

Rajiva Wijesinha, a Sri Lankan MP who is also a former secretary of the country's human rights ministry, told Al Jazeera that the country has launched an "independent" inquiry into the photos of the alleged massacre.
"We have always said that any allegation will be investigated. We believe that our inquiry going on is perfectly independent."

But Dr. Sam Pari, a spokeswoman for the Australian Tamil Congress, says there has to foreign pressure on the Sri Lankan government to allow an international independent investigation into the atrocity.

"The responsibility of pressuring Sri Lanka to allow an international independent investigation falls upon the international governments that currently deal with Sri Lanka in the form of trade, tourism etc," she told Al Jazeera in an interview.

"So if these governments start placing trade sanctions and travel bans on Sri Lanka, then Sri Lanka will be forced to allow an international investigation into war crimes."

In May, Mahinda Rajapaksa, the Sri Lankan president, said that his government will not punish the Sri Lankan army for "defeating terrorism".

"[…] If the international community wants to punish Sri Lanka for defeating terrorism, I'm not for that," Rajapaksa said.

Sri Lanka has repeatedly rejected international calls for an independent inquiry into the war against the Tamil Tigers, in which the UN estimates at least 7,000 Tamil civilians were killed.

Other estimates suggest the figure could be as high as 20,000 and the inference is that many were killed by government shelling.


'Whitewash'

Sri Lanka has instead set up its own inquiry called the "Lessons Learnt and Reconciliation Commission" (LLRC), which critics say is a whitewash.

Both Human Rights Watch and Amnesty International have refused to participate in the inquiry, stating that it does not meet international standards for independent and impartial inquiries.

The human rights organisations say that the new photographic evidence warrants an independent investigation.

Some of the scenery in the photos is similar to that in video material leaked to the international media which seems to show the execution of Tamil Tiger fighters by Sri Lankan soldiers.

Again the Sri Lankan government denied the military carried out the executions, however, after detailed examination, professor Philip Alston, the UN’s former special rapporteur to Sri Lanka, said he believes the video is genuine.

Since the end of the war in May last year, no one from the military has been charged with any offence and no evidence has emerged from the government inquiries. Critics say the Sri Lankan government is writing its own history.

For more than 25 years, the Tamil Tigers waged a secessionist campaign in Sri Lanka that led to it being designated a terrorist organisation by 32 countries.

At one stage in the conflict 300,000 displaced Tamil civilians languished in makeshift camps.

According to the latest figures there are some 35,000 Tamils left on the island. Emergency powers are still in force; there is a heavy military presence in Tamil areas and more and more Tamils are leaving the country.

சிறுவர்களும் உறவினர்களும்

Wednesday, February 24, 2010 · 0 comments

கடந்த சில வாரங்களாக இளையோர் குழுவிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் அவனிடம் ஏதோ வெளியே சொல்ல முடியாத விடயம் மனதினைக் குடைந்து கொண்டிருந்தது. இருபது வயதின் ஆரம்ப நிலையில் இருக்கும் அவனது நடவடிக்கையைப் சில மாதங்களாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் எம்மினால் அதனை இலகுவாகக் கண்டறியக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் யாரிடமும் எதுவும் பேசாது எவருடனும் பழகாது தனித்தே இருப்பான். நாட்டிற்கு மிக அண்மையில் வந்திருந்ததனால் இம் மாற்றம் இருக்கலாம் என எண்ணியிருந்தோம். ஆயினும் இவனது நிலை தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதைக் கண்டு அதன் காரணம் அறிய முற்பட்ட எமக்கு அவனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த தகவல் மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.



பொதுவாக யாரிடமும் நம்பிக்கைத் தன்மை அற்றவனாக அவன் இருப்பது அவனது பெற்றோரிடம் இருந்து அறியக்கிடைத்தது. இப்படியே அன்றும் ஒருநாள் தனித்திருந்தவனிடம் அவனது நிலை என்ன என்பதை அறியும் பொருட்டு உரையாடலை ஆரம்பித்தேன். கடந்த சில மாதங்களாக எம்முடன் பழகிய விதம், தொழிலிடம், மற்றும் சேவைகள் தொடர்பில் கொண்ட நம்பிக்கையின் ஊடாகத் தன் மனதில் தேங்கிக் கிடந்தவற்றை வெளியே சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ளும் ஏக்கத்துடன் உரையாடத் தொடங்கினான்.

அவனது உரையாடல் மூலம் எம் சமூகத்தில் வெளித் தெரியவிடாது உற்றார், உறிவினர்கள் என்னும் பாசப் பிணைப்புக்களால் மறைக்கப்படும் விடயங்களில் ஒரு விடயமும் வெளித் தெரியவந்தது. சிறுவர் பாலியல் கொடுமை, சிறுமிகள் அல்ல சிறுவர்கள்.

உரையாடலில் அவனால் கூறப்பட்ட தகவல்:

“சின்ன வயதில இருந்து எனக்கு யாரையும் கண்டா பிடிக்குதில்ல. எல்லாரும் என்னைத் தங்கட சுயநலத்திற்குப் பயன்படுத்திருவாங்கள் எண்டு எனக்குப் பயமா இருக்கு. எனக்குத் தனிய இருக்கணும் போல இருக்கு. ஆக்களோட சேர்ந்து சந்தோசமா இருக்கோணும் எண்டு நினைச்சாலும் என்னால கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சந்தோசமா இருக்க முடியுதில்ல. அதிலும் குறிப்பாக பெண்களைக் கண்டா என்னால அவங்கள ஒரு மனுசராவே பாக்க முடியுதில்ல. அவங்கள ஒரு பாலியற் பொருளாகத் தான் பாக்க முடியுது. அவங்கட முகத்த நிமிந்து பாக்க முடியல.” இவ்வளவும் கூறியவன் எனது முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை!

இதன் பின்னால் இருக்கும் விடயம் என்ன, ஏன் இவனால் சாதாரணமானவனாக இருக்க முடியவில்லை.

நீண்ட உரையாடல்.. ஆயினும் அவனிற்குத் தன் பிரச்சினையை யாரிடமோ சொன்ன மன ஆறுதல்.
அவனிற்கு என்ன நடைபெற்றது.

குடும்பத்தில் மூத்த பிள்ளை. வேலைக்குச் செல்லும் அம்மா மற்றும் அப்பா. இரண்டு சகோதரிகள். தாய் தந்தையர் வேலை சென்று திரும்பும் வரை தாயாரின் சகோதரிகள் இவனிற்கும் இவனது சகோதரிக்கும் பாதுகாவலர்கள்.

ஐந்து வயது வரை இவனைப் பார்த்து வந்தவர்களில் ஒரு சிறிய தாயாரினால் ஆறு வயது அல்லது இவனிற்கு முதன் முதலாய் நினைவில் இருக்கும் காலத்தில் இவன் மீதான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறு வயது என்ன நடைபெறுகின்றது என்றே தெரியாத நிலை. இது இவனது பதினொரு வயது வரை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வேளையில் இவனது இன்னொரு உறவுக்காரரினாலும் இவன் மீதான பாலியல் கொடூரம் தொடர்கின்றது.

சிறு வயதில் நடைபெற்ற இவ்விடயம் எவ்வாறு இவனிடம் இன்றும் தாக்கம் செலுத்துகின்றது, அதனையும் அவனே விளக்குகின்றான்.

சிறுவயதில் என்னவென்றே தெரியாது பழக்கப்படுத்தப்பட்ட ஒருவிடயம் இடையில் பறிக்கப்பட்ட உணர்வு. அதன் பின்னர் அவனிற்குத் தேவையேற்பட்ட பொழுதில் கிடைக்காத தொடர்பு. இவை அவனை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. இதன் காரணமாகத் தனது படிப்பினைக் குழப்புகின்றான். பின்னர் நீண்ட ஒரு போராட்டத்தின் பின்னர் தன் முயற்சியினால் சாதாரண நிலைக்கு வரும் போது புதியதோர் நாட்டிற்கான இடப்பெயர்வு. இவ்வாறு தொடர்ச்சியாக அவனிடம் வந்து சேர்ந்த இடர்கள்.

சிறுவயதில் தன்னை அறியாது தன்மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை காரணமாக அதனை அறிந்து கொள்ளும் பருவத்தில் அறியந்த பின்னர் அதனை மேற்கொண்ட தன் சிறிய தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு பெண்களை முழுமையாக வெறுப்பதற்கு அடித்தளமிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது அவன் கூறிய இன்னொரு விடயம் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தன்னால் பெண்களை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. அவர்களைக் காணும் போதெல்லாம் தன்னில் கொலைவெறி எழுகின்றது. தன்னைத் தன் சிறிய தாய் தனது உணர்ச்சிக்குப் பாவித்ததைப் போல் அவர்கள் அனைவரையும் நான் பாவிக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றுகின்றது.


உறவினர்கள் மீது வைத்த நம்பிக்கை, அந் நம்பிக்கையின் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தினைத் தவறாகப் பயன்படுத்தியமை என்பன ஒருவனை ஒரு கொடூரமானவனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. இதன் முக்கிய பங்கினை அவனது பெற்றோர்களும் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டியவர்கள் ஆகிறார்கள்.

ஏனையோரிடம் நம்பிக்கை வைப்பதை விடுத்து தங்கள் குழந்தைகளில் தாங்கள் இல்லாத நேரங்களில் என்ன என்ன மாற்றம் நிகழ்கின்றது என்பதனை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் செய்திகளில் வரும் போது நாம் அதைக் கவனிக்காது அவர்களது கலாச்சாரம் அப்படிச் செய்ய வைக்கிறது என விட்டுவிடுகின்றோம், ஆனால் எமது மக்களிடம் இவை போன்ற விடயங்கள் மூடி வைக்கப்படுகின்றன. இது பிள்ளைகளின் எதிர்காலத்தை மிக மோசமாப் பாதிக்கும் விடயம்.

வளர்ச்சியடையந்து வரும் நாடுகளில் இவை தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக இல்லாத காரணத்தாலும் சட்டமுறையை விடச் சமூக கலாச்சார கட்டுப்பாடுகளின் கட்டுக்களாலும் இவை வெளித்தெரியாது உள்ளேயே உறைந்து சிறார்களின் வாழ்வினை சீரழித்து விடுகின்றது.

சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறுமிகளின் மீதான வன்முறை சிறிதளவாவது வெளித்தெரியும் வேளையில் சிறுவர்களின் மீதான வன்முறையானது எமது சமூகத்தில் பாரிள அளவினிலே மறைக்கப்படுகின்றது. இது வன்முறை உணர்வுகள் கொண்ட ஒருவனாக ஒருவனை வளர வழிசமைக்கிறது.

யாராயிருப்பினும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பெற்றோர்களின் கையிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது; குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகக் கண்டறிந்து கொண்டு அது தொடர்பாக சிரத்தை எடுத்தால் இவ்வாறான சிக்கல்களில் இருந்து பெற்றோர்களால் குழந்தைகளை மீட்க முடியும்.

இதனுடன் தொடர்புபட்ட தகவல்:
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானிய ஊடகம் ஒன்றில் வெளிவந்த தகவல்

தகவலிற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்
I was abused by a woman and it haunts me every day

சாத்திரம் (ஜோதிடம்) என்பது என்ன!

Tuesday, February 16, 2010 · 0 comments

சாத்திரம் (ஜோதிடம்) பார்த்துத் தங்கள் வாழ்வினை அமைத்துக்கொள்ளும் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம். இவ்வொளித் தொகுப்பினைப் பார்வையிட்டபின் தீர்மானித்துக் கொள்ளுங்கள். சாத்திரம் பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நின்று நிதானித்துச் செயற்படுங்கள்.

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator