நடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.
ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்க விளைகின்றார்கள். இதனால் இழக்கப்படுவது இவ் அப்பாவிகளின் பணம் மட்டுமல்ல, அவர்களது நிம்மதியும் கூடவே இழக்கப்படுகின்றது. ஒரு நடிகனின் படம் ஓடாவிட்டாலே அதற்கு எதிராகக் கருத்துக் கூறினாலோ ஏதோ தன்னுடைய கௌரவம் குறைந்து விட்டது போன்றே இவர்கள் செயற்படுகின்றார்கள்.
ஏற்கனவே எத்தனையோ புறக்கணிக்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்களுள் கட்டுண்டு கிடக்கும் இச் சமூகத்தில் இந் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்கும் பழக்கமும் வேரூன்றி வருகின்றது. இதற்குக் காரணம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள நிலைமையா அன்றி தேவையற்ற பிடிவாதக்குணமா என்பதனை நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கும் புண்ணியவான்கள் தான் பதிலளிக்க வேண்டும்.
Showing posts with label இளையோர். Show all posts
Showing posts with label இளையோர். Show all posts
ஒரு இரசிகனின் நிலை
Subscribe to:
Posts (Atom)
Archives
Labels
- English (7)
- அரசியற் தலைமை (1)
- இளையோர் (1)
- ஊடகம் (1)
- தமிழர் (9)
- நினைவு (1)
- புலம்பெயர்ந்தவர் (4)
- பொருளாதாரம் (1)