நடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.
ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்க விளைகின்றார்கள். இதனால் இழக்கப்படுவது இவ் அப்பாவிகளின் பணம் மட்டுமல்ல, அவர்களது நிம்மதியும் கூடவே இழக்கப்படுகின்றது. ஒரு நடிகனின் படம் ஓடாவிட்டாலே அதற்கு எதிராகக் கருத்துக் கூறினாலோ ஏதோ தன்னுடைய கௌரவம் குறைந்து விட்டது போன்றே இவர்கள் செயற்படுகின்றார்கள்.
ஏற்கனவே எத்தனையோ புறக்கணிக்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்களுள் கட்டுண்டு கிடக்கும் இச் சமூகத்தில் இந் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்கும் பழக்கமும் வேரூன்றி வருகின்றது. இதற்குக் காரணம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள நிலைமையா அன்றி தேவையற்ற பிடிவாதக்குணமா என்பதனை நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கும் புண்ணியவான்கள் தான் பதிலளிக்க வேண்டும்.
Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts
ஒரு இரசிகனின் நிலை
கெஞ்சும் விஜய்
இடியப்பச் சிக்கலில் இருந்து ஒருவாறு விடுவித்துத் தனது காவலன் திரைப்படத்தைத் திரையரங்குகளிற்கு அனுப்பி வைத்த நடிகர் விஜய் அதனுடன் சேர்த்துத் தனது இரசிகப் பெருமக்களிற்கு கெஞ்சும் ஒளிப்பதிவினையும் அனுப்பிவைத்துள்ளார்.
இங்கு இணைப்பில் இருக்கும் ஒளிப்பதிவில் நடிகர் விஜய் இரசிகர்களிற்கு அனுப்பிவைத்த ஒளிப்பதிவையும், வில்லுப் படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில் பத்திரிகையாளர்களிற்கு அவர் வழங்கிய 'மதிப்பும்' கலவையாக்கப்பட்டுள்ளது. அவ்வொளிப்பதிவு உங்கள் பார்வைக்கு........
Subscribe to:
Posts (Atom)
Archives
Labels
- English (7)
- அரசியற் தலைமை (1)
- இளையோர் (1)
- ஊடகம் (1)
- தமிழர் (9)
- நினைவு (1)
- புலம்பெயர்ந்தவர் (4)
- பொருளாதாரம் (1)